Friday, April 29, 2011

கடலூர் : மாநில அளவிலான போட்டி-Dina malar.

கடலூர் : மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடந்தது. கால்பந்து, பூப்பந்து, வாலிபால், குண்டு எறிதல், ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், டெனி காய்ட் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளையாடினர். அதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். கடலூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஆர்லிக்ஸ் செல்லதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களான டாக்ரோஸ் கம்பெனி துணை பொது மேலாளர் துர்கா பிரசாத், நாகர்கோவில் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் முருகன், அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரேணுகாதேவி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Sunday, April 24, 2011

Madurai -Dina malar


மதுரை : மதுரை மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் டி.ஒய்.எப்.ஐ., அமைப்பின் சார்பில், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்., 25 முதல் மே 10 வரை காலை 6 முதல் 8 மணி, மாலை 4 முதல் 6 மணி வரை இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது பால், முட்டை, பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். தேசிய விளையாட்டு வீரர் முத்துக்குமார் பயிற்சியளிக்கிறார். விருப்பமுள்ளவர்கள் ஏப்., 22 மாலை 4 மணிக்கு, செயின்ட் பிரிட்டோ பள்ளி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நிறைவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ், சீருடை வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என கழகத் தலைவர் விவேகானந்தன், செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு 94439 90964, 98432 33445 ல் தொடர்பு கொள்ளலாம்.

சேலம்-Dina malar 24 04 11.

சேலம்: சேலம், காந்தி ஸ்டேடியத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளதால், இளைஞர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சேலம், மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் சேலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு விளையாடுகின்றனர். விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் பலர் வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா மற்றும் லாபிங்தெரபி போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை, பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களிலும் காந்தி ஸ்டேடியத்தில், கிரிக்கெட் விளையாட ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வருவதால், ஸ்டேடியமே நிரம்பி காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தினமும் 20க்கும் மேற்பட்ட குழுக்கள், ஸ்டேடியம் முழுவதையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். அவர்கள், காலை 7 மணிக்கே வந்து, மாலை 6 வரையிலும், சில சமயம் இரவு 7 மணி வரையிலும் விளையாடுகின்றனர். மைதானத்தில் உள்ள டிராக்கை ஆக்கிரமித்து, ஸ்டம்புகளை நட்டு, ஸ்டம்பிற்கு பதிலாக கற்களை வைத்தும் விளையாடுகின்றனர். இதனால், நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர் மேல் கிரிக்கெட் பந்து விழுவதும், இதுபற்றி கேட்பவர்களிடம் வாக்குவாதம் செய்வதும், இளைஞர்களுக்கு வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் விளையாட வருபவர்களை எச்சரிக்கும் விதமாக, விளையாட்டு அலுவலர் பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிரிக்கெட் விளையாட வேண்டும். விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில், கிரிக்கெட் விளையாட அனுமதி கிடையாது. கிரிக்கெட் விளையாடுபவர்கள் மைதானத்தின் மைய பகுதியில் மட்டும் விளையாட வேண்டும். மேலும், வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும், வாகனத்தை நிறுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கிரிக்கெட் விளையாட வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமார் கூறியதாவது: கிரிக்கெட் விளையாட வருபவர்கள், மைதானம் முழுவதையும் ஆக்கிரமிப்பதுடன், டிராக், டென்னிஸ் கோர்ட், கூடைபந்து கோர்ட், லாபியின் மேற்கூரை ஆகியவற்றை சேதப்படுத்துகின்றனர். அதனால், மற்ற பயிற்சிக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பலமுறை அவர்களிடம் எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளவில்லை. அதனால், எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.


"செஸ்" விளையாட்டுப் போட்டி-dina malar


கடலூர்:கடலூர் மாவட்ட அளவிலான "செஸ்" விளையாட்டுப் போட்டியில் கடலூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர் முதல் இடம் பெற்றார்.
மாவட்ட அளவிலான "செஸ்" விளையாட்டுப் போட்டி, சதுரங்க கழகம் சார்பில் கடந்த 10ம் தேதி பண்ருட்டியில் நடந்தது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அம்ரிஷ் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும் மாணவர் பாரதிமோகன் நான்காம் இடத்தையும், கோகுல் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tuesday, April 19, 2011

Coaching camp at Cuddalore 19 04 11

கடலூர் : கடலூரில் கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் துவங்கியது. இந்திராகாந்தி அகாடமி விளையாட்டு மற்றும் கல்விக் கழகம் சார்பில் கோடை கால கால்பந்து சிறப்பு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி துவக்க விழாவில் இந்திராகாந்தி அகாடமி விளையாட்டு மற்றும் கல்விக் கழகத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலர் மாரியப்பன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.சி., ஜெயச்சந்திரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். சம்பத், துரைசாமி பாராட்டிப் பேசினர். விழாவில் பயிற்சியாளர் செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர். இப்பயிற்சி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

Vadalur CC-Young Rovers trophy.-Dinamalar 19 04 11

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் பாலிடெக்னிக்கில் 7 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடந்தது. பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு பண்ருட்டி யங்ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றதில் வடலூர் வள்ளலார் கிரிக்கெட் கிளப் முதலாம் இடமும், அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி 2ம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கிளப் தலைவர் கலைரஞ்சன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்., அதிகாரி வளையாபதி முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ரெஜினால், கல்லூரி முதல்வர் சவரிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர். கிளப் செயலாளர் முகமதுரஸா நன்றி கூறினார்.

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/