Thursday, November 22, 2012

Dengue eradication two wheelers rally 22 11 12


Federation of Cuddalore Residents welfare association-dengue eradication awareness rally 22 11 12. photos.

http://youtu.be/pnPK6PRZqLU


Two wheeler rally procession video. 13 mts
http://youtu.be/kGeMXHaSMDA

Sunday, November 18, 2012

Friday, November 16, 2012

டெங்கு ஒழிப்பு 16 11 12



டெங்கு ஒழிப்பு: மாவட்டத்தில் துப்புரவுப் பணி தீவிரம்

First Published : 16 November 2012 12:42 PM IST

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டுள்ளார். இதன்படி வியாழக்கிழமைதோறும் 11 முதல் 12 மணி வரையில் அனைவரும் தங்கள் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரம் சுத்தம் செய்ய வேண்டும்.
 ÷கடலூர்: கடலூர் நகர்மன்றம் சார்பில் 45 வார்டுகளிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. நகர் மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த துப்புரவுப் பணியை தொடங்கி வைத்து கழிவுகளை சேகரித்தார்.
 ÷இப்பணியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவி, கவுன்சிலர் கந்தன், சேரலாதன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், நகராட்சி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், சுயஉதவிக் குழுவினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 ÷பண்ருட்டி: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியை நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
 ÷உடன் ஒன்றிய பெருந்தலைவர் மாலதி கமலக்கண்ணன், பண்ருட்டி ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, அருணாசலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 ÷மேலும் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள 42 பஞ்சாயத்துக்களிலும் உள்ள குக்கிராமம் வரையில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வுப் பிரசாரமும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர். ÷
 தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தும், தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர்.
 பண்ருட்டி சேமக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.
 ÷பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் டெங்கு நோய் குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும், கொசு ஒழிப்பு, பிளாஸ்டிக் பொருள் தீமைகள் குறித்த கோஷங்களை எழுப்பியவாறு சேமக்கோட்டை கிராமத்தின் அனைத்து வீதிகள் வழியாக சென்றனர்.
 பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட இணை கன்வீனர் வெ.வீரப்பன் வரவேற்றார்.
 உதவி தலைமையாசிரியர் ராஜராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 நெய்வேலி
 நெய்வேலி, நவ. 15: நெய்வேலியில் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் விளக்க நிகழ்ச்சி புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.
 ÷நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 ÷இதைத் தொடர்ந்து என்எல்சி நகர நிர்வாக சுகாதாரத் துறை அலுவலர் கனிஜாவித் தலைமையில் சுகாதார விழிப்புணர்வு உரை நடைபெற்றது.
 ÷அதையடுத்து பள்ளியின் பசுமைப் படை பொறுப்பாசிரியர் பாலகுருநாதன், தேசிய மாணவர் படை பொறுப்பாசிரியர் ஜெயசீலி, சாரண, சாரணியர் பொறுப்பாசிரியர் சுமதி மற்றும் உடற்கல்வி இயக்குநர் ரேவதி ஆகியோரின் வழிகாட்டுதல்படி மாணவியர்கள் நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் குறித்து துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியதோடு, மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்தனர்.
 ÷முன்னதாக விழிப்புணர்வுப் பேரணியை பள்ளித் தலைமையாசிரியை ஆர்.எஸ்.மணிமொழி தொடங்கி வைத்தார்.
 உதவித் தலைமை ஆசிரியர் தங்கராசு முன்னிலை வகித்தார். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கேற்றனர்.
 உதவி ஆட்சியர் ஆய்வு
 சிதம்பரம், நவ. 15: சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்த் தேங்கியும், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ள சுகாதாரக் கேடான பகுதிகளை உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், வட்டாட்சியர் க.தனசிங் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
 ÷அப்போது சிதம்பரம் பஸ் நிலையப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் பலகாரக் கடைகளில் நீர் தேங்கி சுகாதார கேடாக இருந்ததை கண்டு, அக்கடை உரிமையாளர்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த எச்சரிக்கை விடுத்தார்.
 ÷பஸ் நிலையக் கட்டடத்தின் மாடிப் பகுதியும், கழிப்பறை குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆகியவை மிகவும் துர்நாற்றத்துடன் இருந்ததை கண்டறித்த உதவிஆட்சியர் நகராட்சி அலுவலர்களை அழைத்துக் கண்டி
த்தார்.

Thursday, November 15, 2012

டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆட்சியர் உத்தரவு:Dina mani



டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆட்சியர் உத்தரவு:  மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

 

 கடலூர்

First Published : 13 November 2012 05:50 AM IST

 



கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக ஆட்சியரின் உத்தரவை மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ எச்சரித்துள்ளார்.
 இது குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 கடலூர் மாவட்டத்தில் டெங்கு நோய் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 மேலும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு செய்திகள், எஸ்.எம்.எஸ் ஆகியவற்றின் வாயிலாகவும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 இதன் ஒரு கட்டமாக, கடந்த 8-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
 இப்பணி ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கழிவுப் பொருள்களை தூக்கி வீசாமல் தரம்பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
 சுற்றுப்பகுதியில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரம்தோறும் வியாழக்கிழமை ஒரு மணிநேரம் அவரவர் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
 இப்பணிகளை கண்காணிக்க, வருவாய்துறை, சுகாதாரத் துறை மற்றும் போலீஸôர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இதில், ஆட்சியரின் உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 144-ன்படி மாவட்ட ஆட்சியருக்கு உள்ள அதிகாரத்தின் படி 188 அ, 269, 270 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

dengue, toll touches 1,546-New Delhi.-Times of India.



34 test positive for dengue, toll touches 1,546




NEW DELHI: With 34 people testing positive for Dengue on Wednesday, the toll touched 1,546 in the capital. A maximum of 580 cases were reported from South Delhi Municipal Corporation, 519 from North Delhi Municipal Corporation area and 380 from East Delhi Municipal Corporation. Other cases of the vector-borne disease were reported from NDMC and Delhi cantonment areas.

Last year, a total of 964 cases were reported and five deaths took place while in 2010, a total of 5,973 dengue cases and eight deaths were recorded in the capital. The state government had recently launched an SMS campaign to educate people about the preventive measures that can contain the spread of the disease.

According to health minister A K Walia, over 60 lakh text messages will be sent to citizens to inform them about the steps required to ensure that the deadly virus does not breed in their surroundings.

At a review meeting on Monday, Walia sanctioned Rs 5 crore to East, North and South Delhi municipal corporations and asked them to intensify fogging exercise across the city and take steps urgently to contain mosquito breeding. He also directed the three civic bodies to engage 3,400 domestic breeding checkers (DBC) to carry out checking throughout the year instead of the current practice of engaging them from April to November. The DBCs carry out checks in city households to contain any possible mosquito breeding ground and accordingly recommend steps to Municipal Corporation.

Skanda Shasti in Cuddalore Sri Vilvanatheeswarar temple



Skanda Shasti in Cuddalore Sri Vilvanatheeswarar temple 14 11 12.
http://youtu.be/M95yx6TDKRI

Friday, November 9, 2012

கடலூர் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு





கடலூர்: கடலூரில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் டெங்கு கொசுப் புழு ஒழிப்பு சிறப்பு பணி நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். சுகாதாரப் பணிகள் நிர்வாக இயக்குனர் முருகதாஸ், கண்காணிப்பாளர்கள் சண்முகானந்தன், அப்துல் அஜீம் மற்றும் ஊழியர்கள், துணை இயக்குனர் அலுவலக வளாகம் முழுவதும் தூய்மை செய்தனர். தொடர்ந்து, கொசு புழு வளர்வதற்கு ஏதுவாக இருந்த ஓடுகள், கப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டது. 




விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்

கடலூர்: கடலூரில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கிராம வள மையம் சார்பில் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் இளங்கோவன், டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவகர் பெற்றுக் கொண்டார். டெங்கு நோயின் அறிகுறிகள், இந்நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 


 கடலூர் நகராட்சியில் சேர்மன் தலைமையில் துப்புரவு பணி


கடலூர்: கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை ஒட்டு மொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை மாவட்டம் முழுவதும், டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக, ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று கடலூர் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் சுப்ரமணியன் தலைமையில், கமிஷனர் (பொறுப்பு) ரவி, கவுன்சிலர்கள், சுகாதார பணியாளர்கள், ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்து, நகராட்சி வளா கத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தினர். 


டெங்கு ஒழிப்பது குறித்து வீடு, வீடாக பிரசாரம்


கிள்ளை: கிள்ளை அருகே டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்து ஊராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்தனர். கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பது குறித்து ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்றும், முக்கிய இடங்களில் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத்தலைவர் அஷ்ரப் அலி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் அருண்உதயா, உஷா, டெல்பின் சாந்தி உள்பட பலர் கலந்து 
கொண்டனர்.



 கொசு ஒழிப்பு "மாஸ் கிளீனிங்' அரசு அலுவலகங்கள் "பளீச்'

சிதம்பரம்: டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்க "மாஸ் கிளீனிங்' முன் மாதிரி திட்டம் சிதம்பரத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் நோயை பரப்பும் கொசுவை ஒழிக்க அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை பகல் 11 மணி முதல் 12 மணி வரை ஒரே நாளில் ஒரே நேரத்தில் தேங்கியுள்ள மழை நீரை ஒட்டு மொத்தமாக அகற்றும் "மாஸ் கிளீனிங்' முன் மாதிரி திட்டத்தை சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி உள்ளிட்ட பல இடங்களில் துவக்கியது. இதன் தொடர்ச்சியாக டெங்கு கொசு ஒழிப்பு "மாஸ் கிளீனிங்' முன் மாதிரி திட்டம் நேற்று சிதம்பரம் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிதம்பரம் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பள்ளிகளில் 11 மணி முதல் ஒரு மணி நேரம் தங்கள் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிளில் தேங்கி உள்ள தண்ணீரை அப்புறப்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் கப், பைகள், பேப்பர்கள் போன்றவைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இதனால் அரசு அலுவலகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் அலுவலகம் உட்புறங்கள் "பளீச்' என சுத்தமாக காணப்பட்டது. அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 


ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., அதிரடி சோதனை


ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டுமன்னார்கோவில், எம்.எல்.ஏ., திடீர் சோதனை மேற்கொண்டார். ஸ்ரீமுஷ்ணத்திற்கு நேற்று காலை காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல். ஏ., முருகுமாறன் வருகைதந்தார். தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு, பணியில் இருந்த டாக்டர்களிடம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார நிலையத்திற்குத் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டார். அப்போது சுகாதார நிலையத்திற்கு அரசு மகப்பேறு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும். புற நோயாளிகள் தங்குவதற்கு அறை , சித்த மருத்துவ பிரிவிற்கு கட்டடம். ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த ஷெட் மற்றும் டெங்கு நோய்க்கு பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வரும் சிறப்பு குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குச் சென்று குழந்தைகளிடம் நலம் விசாரித்தார். பேரூராட்சி சேர்மன் ஆதிலட்சுமி கலியமூர்த்தி, காட்டுமன்னார்கோவில் சேர்மன் மணிகண்டன், மாவட்ட அவைத் தலைவர் கலியமூர்த்தி, நகர செயலர் பூமாலை கேசவன், முன்னாள் மாவட்ட கழகச் செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடைக்காரர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்-dinamalar.


கடைக்காரர்களுக்கு டோஸ் விட்ட கலெக்டர்
 நவம்பர் 09,2012




கடலூர்: கலெக்டர் அலுவலகம் எதிரே சுற்றுப்புறத்தை சுகாதாரமில்லாமல் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு கலெக்டர் "செம டோஸ்' விட்டார். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை முற்றிலும் ஒழிக்க முன் மாதிரித் திட்டத்தின் துவக்க நாளான நேற்று கலெக்டர் ராஜேந்திர ரத்னு, அலுவலகத்தைச் சுற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்கு எதிரே வரிசையாக வைத்திருக்கும் பிரியாணி கடைகளுக்குள் நுழைந்து உணவு சுகாதாரமாக இருக்கிறதா என சோதனை செய்தார். கடையின் பின் பகுதியில் சகதியாய் இருந்ததுடன் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததைப் பார்த்து கலெக்டர் கடுப்பானார். உடனே கடைக்காரர்களை அழைத்து "செமடோஸ்' விட்டார். தொடர்ந்து, "இதேப்போன்று குப்பைகளாகவும், சுகாதார கேடு ஏற்படும் வகையில் இருந்தால் அனைத்து கடைகளையும் உடனடியாக காலி செய்து விடுவேன்' என எச்சரித்தார். மைதானத்தில் சுயஉதவிக்குழு நடத்தும் ஆவின் கடையில் கப்புகள் சிதறிக் கிடந்ததை கலெக்டர் சேகரித்து கூடையில் போட்டார். சுயஉதவிக்குழு பெண்களிடம் இப்படி கண்ட இடங்களில் கப்புகளை போடலாமா என கேட்டார். மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கடைகளுக்கு பின் பகுதியில் இளநீர் மட்டைகள் குவியலாக கிடந்தன. இதில் பெரும்பாலான மட்டைகளில் தண்ணீர் இருந்தது. டெங்குவை உருவாக்கும் இந்த இளநீர் மட்டையை கலெக்டர் மற்றும் சுகாதார அதிகாரிகள் தண்ணீரை கொட்டி காலி செய்தனர். இந்நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ., தமிழ்ச் செல்வராஜன் உடனிருந்தார்.

Thursday, November 8, 2012

வீட்டை சுற்றிலும் சுத்தம் செய்தால் டெங்கு வராது



வீட்டை சுற்றிலும் சுத்தம் செய்தால் டெங்கு வராது

  பரங்கிப்பேட்டை:டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் சுப்ரமணியன், பேரூராட்சிகளின் துணை இயக்குனர் பரமகுரு முன்னிலை
வகித்தனர். செயல் அலுவலர் கலைபாண்டியன் வரவேற்றார்.கலெக்டர் ராஜேந்திர ரத்னு பங்கேற்று பேசியதாவது: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு உற்பத்திக்கு சாதகமான அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் நீர் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 11 மணிக்கு துவங்கி 12 மணி வரை மாவட்டம் முழுவதும் இந்த பணி நடக்கும்.
பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகங்கள், மாணவ, மாணவிகள் விடுதி, தனியார் கட்டடங்கள் போன்ற இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்.ஒவ்வொருவரும் வீட்டை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தால், டெங்கு காய்ச்சல் வராது. பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் ஓரளவு அகற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கும் இடங்களில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக வரும்.
இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார்.பேரூராட்சி துணைத் தலைவர் நடராஜன், முன்னாள் துணைத்தலைவர் செழியன், கவுன்சிலர்கள் இப்ராகீம், அபிப் ரகுமான், கணேசன், சிவவடிவேலு, பாரதி, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, November 4, 2012

Saturday, November 3, 2012

Com G.Sarojini BSNL TRA retirement function.


Com Srinivasan speaks, R.v.Jayaraman welcomes. 22 mts. video.
http://youtu.be/cKIzVxZ061o


Retirement Cuddalore BSNL- Presentation,Fr.CAO Shanmugasundaram,Ao Veerappan. 30 10 12R
10 mts.
http://youtu.be/suMz4cJttw4



Com G.Sarojini retirement- Ao Veerappan, Com Parvathi,Com Asokan.30 10 12 Cuddalore. 10 mts

http://youtu.be/704xSeKT3qQ




Cuddalore BSNL TRA unit 30 10 12 Com GSarojini retirment-V.Neelakandan,JAo Elangovan,Smt Revathy Ladies organiser,JAO Alice Mary, JAO Chitra Nagarajan  17 mts.


http://youtu.be/-FOzkwwk2VU


30 10 12 BSNL TRA unit. S.Govindaraj, G.Sarojini,N.Rajaram.

http://youtu.be/D0050Z05wPo             7 mts. 

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/