Tuesday, December 27, 2011

About telecom products.

cuddalore beach 27 12 2011


cuddalore beach 7th tsunami remembrance.


Cuddalore sea on 27 12 2011 morning 9-30 am.video using cell phone.


இதுவல்லவோ மனித நேயம்! : சமூக சேவையில் ரயில்வே தொழிலாளர்கள்

கோவை: கோவையில், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார வியாபாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட, 50க்கும் மேற்பட்ட, சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர், 74 குழந்தைகளை மீட்டுள்ளனர். அந்த சிறுவன் பெயர் சுரேஷ் பாபு. 20 ஆண்டுகளுக்கு முன், கோவையின் ஏதோ ஒரு தெருவில் இருந்து, மீட்டு வரப்பட்ட அந்த சிறுவனுக்கு, கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில், அடைக்கலம் கிடைத்தது. அந்த சிறுவன் இன்று வளர்ந்து, அதே அன்பு இல்லத்தில் பணியாற்றுகிறார்.
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.


http://www.dinamalar.com/News_detail.asp?Id=374177

Friday, December 23, 2011

எலுமிச்சை

Railways to Accept “Aadhaar” as Additional Identity Proof for E-Ticketing & Tatkal Scheme

 Ministry of Railways
Railways to Accept “Aadhaar” as Additional Identity Proof for E-Ticketing & Tatkal Scheme
As “Aadhaar” is covered under the heading ‘Photo Identity Card Issued by Central/State Government’, the Ministry of Railways has decided to specifically incorporate and indicate “Aadhaar” as one of the proofs of identity acceptable for undertaking journey on e-tickets as well as under Tatkal scheme. Hence, the number of proofs of identity to be accepted for undertaking journey on e-tickets as well as under Tatkal scheme will now become 9 (nine) as mentioned below:
(i)    Voter Photo Identity Card issued by Election Commission of India.
(ii)    Passport
(iii)    PAN Card issued by Income Tax Department
(iv)    Driving License issued by RTO
(v)    Photo Identity Card issued by Central/State Government
(vi)    Student Identity Card with photograph issued by recognized School/college for their students.
(vii)    Nationalized Bank Passbook with photograph
(viii)    Credit Cards issued by Banks with laminated photograph and
(ix)    Unique Identification Card “Aadhaar”
PIB

Wednesday, December 14, 2011

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
 Description: http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300313_246484118719774_100000745631208_784688_6736633_a.jpg
 இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
 ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.      
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
    இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
 இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
 நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
 நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
 
Description: http://photos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/300253_246484692053050_100000745631208_784691_4297693_a.jpg
 எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
 எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!
 எப்படியா ??
 அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
 நமக்கு மேலே ஒருவன்....
  
என் கருத்து: இந்த மின் அஞ்சல் நம்மை பெருமை படுத்துவதாக நினைத்த போதிலும், பெரும் சிறுமையும் இங்கு நம் மேல் பூசப்படுகிறது. நம் முன்னோர்களின் கண்டுபிடுப்புகள் எல்லாம் எங்கோ இருந்து வந்து யாரோ சொல்ல நாம் கேட்டு பெருமை படுகிறோம். நம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஆயிரம் அறுவியல் அர்த்தங்கள் உண்டு. அதை அறியாமல் செய்யப்படும் போது எதுவும் முழுமை அடைவதில்லை.

இந்தியாவில் உள்ள கோயில்கள் அனைத்தும் அறுவியல் அரங்கங்கள். மேட்கூரியவற்றுடன் இதுவும்,
சூரிய பகவான் எப்போதும் ஏன் ஏழு வண்ணக் குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார்..?

இவையெல்லாம் பகுத்தறியாமல் பல பகுதறிவாளிகள் விட்டோழித்ததால் தான் இன்று நம் பெருமையை மாற்றான் வந்து சொல்லக் கேட்கிறோம். கடவுளோடும் கோயில்கலோடும் பின்னி பிணைந்து உள்ளது நம் அறிவியல்.

Sunday, December 11, 2011

CENTRAL GOVT. NEWS.

Eligibility criteria for the posts of Postal Assistants and Sorting Assistants…
This information was given by Minister of State in the Ministry of Communications and Information Technology SHRI SACHIN PILOT in written reply to a question (2145 - Shri M.B.RAJESH) raised in Lok Sabha on 07.12.2011 regarding the eligibility criteria for recruitment in Postal Department.
MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY
ELIGIBILITY CRITERIA FOR RECRUITMENT
Question :-
(a) whether the Department of Posts has specified any fresh eligibility criteria for the posts of Postal Assistants and Sorting Assistants;
(b) if so, the details thereof and the reasons therefor;
(c) whether the Department has specifically excluded vocational streams from the recruitment process;
(d) if so, the details thereof and the reasons therefor;
(e) whether the Government proposes to amend the eligibility criteria to include vocational streams; and
(f) if so, the details thereof and the action taken in this regard?
Answer :-
(a) Yes Madam.
(b) The educational criteria and other qualifications required for direct recruits are:
(i) 10+2 standard or 12th class pass with at least 60% marks, from recognized University/Board of School Education/Board of Secondary Education with English as a compulsory subject (excluding vocational streams), 55% for other Backward Classes and 45% for Scheduled Caste/Scheduled Tribes.
(ii) Should have studied local language of the State or Union Territory of the concerned Postal Circle or Hindi as a subject at least in Matriculation or equivalent. Earlier “Scheme of Examination” for direct recruitment provided for, shortlisting of the candidates to the extent of 10 times of the reported vacancies, based on the marks obtained by them in 10+2 standard or 12th class. As per the amended Recruitment Rules, all candidates having the prescribed educational qualification and are otherwise found eligible would be called for appearing in the examination. Apart from it, the candidates who had studied Hindi up to Matriculation have also been made eligible. The said amendments in the Recruitment Rules have been done to widen the field of selection.
(c) The provisions of the earlier Recruitment Rules in this regard have been retained.
(d) Not applicable in view of reply to (c).
(e) No Madam.
(f) Does not arise in view of reply to (e) above.
Parliament Matters…
this is a test message
Posted: 09 Dec 2011 08:47 PM PST
Directorate General
Central Industrial Security Force
(Ministry of Home Affairs)
Block No.13, CGO Complex,
Lodi Road, New Delhi-03.
Dated, the 4th August, 2011
No.E-28012(2)/1/09-Estt.II/PF/1922
To
All Sector IsG (including Airport and Trg. Sector)
Sub : Increase of allowance by 25% each time the price index increase by 50% : Clarification.
        On implementation of 6th CPC recommendations, various allowances such as Children Education Allowance, Kit Maintenance Allowance, Washing Allowance, Family Accommodation Allowance, SCA etc. had been revised by the Govt. w.e.f. 1.9.2008 with the stipulation that the rate shall increase by 25% each time the price index increases by 50%. It is pertinent to mention that in some of the order, it has been mentioned that the rate of this allowance (e.g. CEA & SCA) shall automatically increased by 25%, whenever the Dearness Allowance payable on the revised pay structures goes up by 50%, and in some other order, it has been mentioned that the rate of this allowance will increase by 25% each time the price index increases by 50%.
2. Consequent upon the enhancement of the rate of Dearness allowance payable to central Government employees from the existing rate of 45% to 51% with effect from 1st January 2011 vide G.I. M.F. O.M. No. 1(2)/2011-EII(B) dated 24.3.2011, this Directorate has received references from various field units seeking clarification whether such allowances shall increase automatically by 25% each time the price index increased by 50% or any specific order is required for claiming such allowances at the enhanced rates. The matter was referred to the Ministry.
3. The MHA has now clarified that in view of the MoF Resolution dated 29.08 2008 and DOPT OM dated 4.5.2011 no specific order is required to be issued, vide their UO No.E-12012/(2)09-Esst.II/PF.II dated 22nd July 2011.
4. All the units under your Sector may kindly be advised accordingly.

Monday, November 14, 2011

Sloka recitation competition

Sloka recitation competition

Share  ·   print   ·   T+  
Sri Vishnu Sahasranamam Satsangam, R. K. Puram, is conducting Vishnu Sahasranama recitation competition for school children at Devi Kamakshi Mandir on Aruna Asif Ali Road here on November 20. Children studying in schools other than DTEA/Andhra schools can participate in the preliminary round competition for which the syllabus is as follows.
Group I (kindergarten classes, age below 5 years -- 10 slokas starting from Viswam Vishnu); Gr. II (Classes I and II -- slokas 1 to 25); Gr. III (Classes III to V -- slokas 1 to 50); Gr. IV (Classes VI to VIII -- slokas 1 to 100); Gr. V (Classes IX and X -- full text); and Gr. VI (Classes XI and XII -- full text and meanings will be asked).
Further details can be had from Trustee T. Subramanian (26898956, 9910077903).

Drawing competion at Cuddalore.

About Tatkal reservation in railways.

Press Information Bureau
Government of India
Ministry of Railways
11-November-2011
Railway Minister Announces Fresh Measures to Prevent Misuse of Tatkal Travel Scheme
The Minister of Railways Shri Dinesh Trivedi at a press conference here today said that several measures are proposed to be implemented in the next one week or so with a view to prevent misuse of Tatkal scheme by agents/unscrupulous elements by the activities during opening hours of the reservation counters:. These measures announced by him are as follows:-


                                            i.      The advance reservation period of Tatkal scheme should be reduced from two days at present to one day excluding the day of journey from the train originating station.  For example, if train is to depart from the originating station on the second of the month, the Tatkal quota for that particular train shall open at 0800 hours on the first of the month.
 
                                          ii.      There shall be no refund on confirmed Tatkal tickets subject to the exceptions such as cancellation of trains, late running of trains, etc.  This is proposed on account of the following reasons :-
 
 
·        Advance reservation period of Tatkal is very short i.e. approximately one day.  It is expected that the passenger would have a firm programme of travel before booking the Tatkal ticket.
 
·        To prevent misuse of Tatkal ticket by unscrupulous elements by resorting to speculative booking.
 
 
                                        iii.      No duplicate Tatkal tickets shall be issued. Duplicate Tatkal tickets shall be issued only in exceptional cases on payment of full fare including Tatkal charges.
 
                                        iv.      Tatkal tickets shall be sold only on production of one of the eight prescribed Identity cards as proof of identity.  For this purpose, a self attested photo copy of the identity card on which the passenger(s) proposes to travel shall be attached to the requisition slip.  The details of the identity proof shall be captured by the system and indicated on the reserved tickets as well on the chart. It will not be mandatory for the passengers to go to the counter to book the Tatkal ticket, however, the proof will have to be sent in the aforementioned manner.  During the journey, the passenger will have to produce original proof of identity indicated on the ticket. In future, when AADHAAR is operational, the issue of Tatkal tickets will be linked to AADHAAR.
 
 
                                          v.      Agents / RTSAs shall be restricted from the booking Tatkal tickets at the counters between 0800 hrs. and 1000 hrs. This restriction shall be enforced through frequent inspection at the counters. The agents both web service agents and web agents shall also be restricted from booking Tatkal tickets on the internet between 0800 hrs. and 1000 hrs.
 
                                        vi.      Even for internet booking for Tatkal tickets, the passenger shall enter the identity proof type and number, which is to be used for travel.  These details shall be printed on the ERS as well as the chart for Tatkal tickets.
 
 
                                      vii.      There shall be only four passengers per PNR for Tatkal tickets.
 
                                    viii.      The web services agents of IRCTC will be permitted to book only one Tatkal ticket per train per day on the internet.
 
 
                                        ix.      Cameras will be installed at the ticket counters for maintaining stricter surveillance.
MORE NEWS ABOUT TATKL BOOKING…

Friday, September 23, 2011

End-of-innings-for-Nawab-of-Cricket

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

கடலூர்:சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாட 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு வரும் 25ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் வரும் செப்., 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரையில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்களுக்கான மாநிலப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.அதனைத்தொடர்ந்து அக்., 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்களுக்கான மாநில போட்டியும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடக்கிறது.

இதற்காக கடலூர் மாவட்ட கைப்பந்து அணிக்கான மாணவ, மாணவியர் வீரர்களின் தேர்வு வரும் செப்., 25ம் தேதி மாலை 2.30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் கைப்பந்து வீரர்கள் 96ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்றோ அல்லது அதன் பிறகோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். பள்ளி மாணவர்கள் அவரது பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழினை பெற்று வர வேண்டும். பள்ளிசாரா மாணவர்கள் நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழை கொண்டு வருதல் வேண்டும்.இத்தகவலை மாவட்ட கைப்பந்து கழகச் செயலர் முரளிதாஸ் தெரிவித்துள்ளார்.

Dinamalar-மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டி

கடலூர் : மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடலூர் மாவட்ட அணி 16 தங்கம் உட்பட 38 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மாநில அளவிலான நீச்சல் போட்டி மதுரை எம்.ஜி.ஆர்., விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடந்தது. எட்டு பிரிவுகளில் நடந்த போட்டியில் மாநிலத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 474 பேர் போட்டியில் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட அணி சார்பில் 23 பேர் பங்கேற்றனர். இதில் கடலூர் சி.கே.பள்ளி மாணவர்கள் செபாபிராங்களின் ஒரு தங்கம், 2 வெள்ளியும், டேவிஸ் நிரஞ்சன் 2 தங்கம், ஒரு வெள்ளியும், ரக்ஷனா 3 தங்கமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். கவுரவ் சேகரன், ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றார். சவுந்தர்யா தேவி ஒரு தங்கம், 2 வெள்ளியும், ராகேஷ் ஒரு தங்கம், ஹரிணிஸ்ரீ 2 வெள்ளி, ஒரு வெண்கலமும் பெற்றார்.

ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி மாணவர்கள் சுபாஷ் சந்தர் 2 தங்கம், அபிஷேக் ஒரு தங்கம், ஒரு வெண்கலமும், சஞ்சய், குமரேஷ் தலா ஒரு தங்கம், குமரேஷ் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றார். கிருஷ்ணசாமி பள்ளி மாணவர் லத்திஷ் ஷரண் ஒரு தங்கம் பெற்றார். அக்ஷரா பள்ளி மாணவர் ராகவேந்திரன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வெற்றார். மதர் தெரசா பள்ளி மாணவி ருக்ஷனா 3 வெள்ளி பெற்றார். ஆரோ சைல்டு பள்ளி மாணவர் விமல் ஒரு வெள்ளி வென்றார். புனித அன்னாள் பள்ளி மாணவி லட்சுமி சுவாதிகா ஒரு வெண்கலம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்றுனர் அருணா ஆகியோர் பாராட்டினர்.

Saturday, May 21, 2011

விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரி-Dina malar 19 05 11

விழுப்புரம் : விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வுநடக்கிறது. விக்கிரவாண்டி சூர்யா கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கவுதமசிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் 2011-12 ம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு கல்லூரி வளாகத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் கைப்பந்து, கூடைபந்து,டென்னிஸ், இறகு பந்து, பெண்கள் பிரிவில் டென்னிஸ், இறகுபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு கல்வி செலவுகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கல்வி குழும இயக்குனர் டாக்டர் சாந்தியை நேரிலும், தீதீதீ.ண்தணூதூச்ஞ்ணூணிதணீ.ஞுஞீத.டிண என்ற இணைய தள முகவரியிலும், மொபைல் எண்கள் 98437 01701, 97897 26655, 98949 79811 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு டாக்டர் கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார்.

கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டிங் அகாடமி-Dina malar.19 05 11

கடலூர் : கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக சர்வதேச ஸ்கேட்டிங் வீரரை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் ஆர்மி அமெச்சூர் ஸ்கேட்டில் அகாடமி சார்பில் கடந்த 30 நாட்களாக சிறப்பு ஸ்கேட்டிங் கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பயிற்சியின் இறுதியாக முகாமில் பங்கேற்ற சிறுவர்களுக்கு சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரொமென் சிறப்பு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியை அகாடமி சேர்மன் ராமலிங்கம் துவக்கி வைத்தார். பயிற்சியாளர் பிஸ்வாஸ், அகாடமி செயலாளர் சந்திரமோகன்பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சட்ட ஆலோசகர் கதிர்வேல், அகாடமி துணைதலைவர் கேப்டன் ரங்கநாதன், இணை செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, துரைராஜ், ராமானுஜம் ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, May 6, 2011

ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள்-Dina malar 06 05 11


கிள்ளை : சிதம்பரம் ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பிச்சாவரம் வரை தொடர் ஓட்டம் நடத்தினர். சிதம்பரம் ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்கள் அவ்வப்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தில் துவங்கிய நடை பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஓட்டச் சுடரை எழுத்தாளர் பாலசுப்ரமணியன் ஏற்றினார். அணி வணிகர் பழனி துவக்கி வைத்தார். கராத்தே நிபுணர் சென்னை ரென்ஷி குமார், சென்சாய்கள் இளங்கோவன், விஸ்வநாதன், பாஸ்கர், சினிமா நடிகர் கராத்தே ராஜன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி, முன்னாள் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தொடர் ஓட்ட ஜோதி ஏந்தி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காராத்தே பயிற்சி மாணவர்கள் சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் வரை வரை 15 கி.மீ., தொடர் ஓட்டமாக சென்றனர்.

match fixed? yahoo.com

Sunday, May 1, 2011

கடலூர் : இகாஸ் கால்பந்து மாணவிகள் -Dina malar.1 05 11

கடலூர் : இகாஸ் கால்பந்து மாணவிகள் 40 பேருக்கு டான்ஃபேக் கம்பெனி சார்பில் இலவச விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது. கடலூரில் இகாஸ் கால்பந்து அமைப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்டு, அரசு காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளை தேர்வு செய்து கால்பந்து பயிற்சி அளித்து வருகிறது. இக்குழுவில் உள்ள மாணவிகள் வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுக்குச் சென்று பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று வருகின்றனர். தற்போது இக்குழுவில் உள்ள மாணவிகள் மகாலட்சுமி, கண்ணாத்தா, பத்மாவதி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துவரும் தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது இக்குழுவினருடன் இகாஸ் கோடை கால கால்பந்து பயிற்சி முகாமில், கடலூர் சிப்காட் டான்ஃபேக் கம்பெனி சார்பில் கால்பந்தாட்ட மாணவிகள் 40 பேருக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டான்ஃபேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத்குமார் மாணவிகளுக்கு சீருடை வழங்கினார். இகாஸ் செயலாளர் மாரியப்பன், பயிற்சியாளர் செங்குட்டுவன், ராஜ்மோகன், துரைசாமி, சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இகாஸ் பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

Friday, April 29, 2011

கடலூர் : மாநில அளவிலான போட்டி-Dina malar.

கடலூர் : மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடந்தது. கால்பந்து, பூப்பந்து, வாலிபால், குண்டு எறிதல், ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், டெனி காய்ட் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளையாடினர். அதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். கடலூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஆர்லிக்ஸ் செல்லதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களான டாக்ரோஸ் கம்பெனி துணை பொது மேலாளர் துர்கா பிரசாத், நாகர்கோவில் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் முருகன், அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரேணுகாதேவி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

Sunday, April 24, 2011

Madurai -Dina malar


மதுரை : மதுரை மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் டி.ஒய்.எப்.ஐ., அமைப்பின் சார்பில், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்., 25 முதல் மே 10 வரை காலை 6 முதல் 8 மணி, மாலை 4 முதல் 6 மணி வரை இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது பால், முட்டை, பிஸ்கட் இலவசமாக வழங்கப்படும். தேசிய விளையாட்டு வீரர் முத்துக்குமார் பயிற்சியளிக்கிறார். விருப்பமுள்ளவர்கள் ஏப்., 22 மாலை 4 மணிக்கு, செயின்ட் பிரிட்டோ பள்ளி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நிறைவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ், சீருடை வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என கழகத் தலைவர் விவேகானந்தன், செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்கு 94439 90964, 98432 33445 ல் தொடர்பு கொள்ளலாம்.

சேலம்-Dina malar 24 04 11.

சேலம்: சேலம், காந்தி ஸ்டேடியத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளதால், இளைஞர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சேலம், மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் சேலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு விளையாடுகின்றனர். விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் பலர் வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா மற்றும் லாபிங்தெரபி போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை, பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களிலும் காந்தி ஸ்டேடியத்தில், கிரிக்கெட் விளையாட ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வருவதால், ஸ்டேடியமே நிரம்பி காணப்படும். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தினமும் 20க்கும் மேற்பட்ட குழுக்கள், ஸ்டேடியம் முழுவதையும் ஆக்கிரமித்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். அவர்கள், காலை 7 மணிக்கே வந்து, மாலை 6 வரையிலும், சில சமயம் இரவு 7 மணி வரையிலும் விளையாடுகின்றனர். மைதானத்தில் உள்ள டிராக்கை ஆக்கிரமித்து, ஸ்டம்புகளை நட்டு, ஸ்டம்பிற்கு பதிலாக கற்களை வைத்தும் விளையாடுகின்றனர். இதனால், நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர் மேல் கிரிக்கெட் பந்து விழுவதும், இதுபற்றி கேட்பவர்களிடம் வாக்குவாதம் செய்வதும், இளைஞர்களுக்கு வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் விளையாட வருபவர்களை எச்சரிக்கும் விதமாக, விளையாட்டு அலுவலர் பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிரிக்கெட் விளையாட வேண்டும். விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில், கிரிக்கெட் விளையாட அனுமதி கிடையாது. கிரிக்கெட் விளையாடுபவர்கள் மைதானத்தின் மைய பகுதியில் மட்டும் விளையாட வேண்டும். மேலும், வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும், வாகனத்தை நிறுத்த வேண்டும். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கிரிக்கெட் விளையாட வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமார் கூறியதாவது: கிரிக்கெட் விளையாட வருபவர்கள், மைதானம் முழுவதையும் ஆக்கிரமிப்பதுடன், டிராக், டென்னிஸ் கோர்ட், கூடைபந்து கோர்ட், லாபியின் மேற்கூரை ஆகியவற்றை சேதப்படுத்துகின்றனர். அதனால், மற்ற பயிற்சிக்கு வருபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பலமுறை அவர்களிடம் எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளவில்லை. அதனால், எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.


"செஸ்" விளையாட்டுப் போட்டி-dina malar


கடலூர்:கடலூர் மாவட்ட அளவிலான "செஸ்" விளையாட்டுப் போட்டியில் கடலூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர் முதல் இடம் பெற்றார்.
மாவட்ட அளவிலான "செஸ்" விளையாட்டுப் போட்டி, சதுரங்க கழகம் சார்பில் கடந்த 10ம் தேதி பண்ருட்டியில் நடந்தது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அம்ரிஷ் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும் மாணவர் பாரதிமோகன் நான்காம் இடத்தையும், கோகுல் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tuesday, April 19, 2011

Coaching camp at Cuddalore 19 04 11

கடலூர் : கடலூரில் கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் துவங்கியது. இந்திராகாந்தி அகாடமி விளையாட்டு மற்றும் கல்விக் கழகம் சார்பில் கோடை கால கால்பந்து சிறப்பு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி துவக்க விழாவில் இந்திராகாந்தி அகாடமி விளையாட்டு மற்றும் கல்விக் கழகத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலர் மாரியப்பன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.சி., ஜெயச்சந்திரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். சம்பத், துரைசாமி பாராட்டிப் பேசினர். விழாவில் பயிற்சியாளர் செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர். இப்பயிற்சி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. பொருளாளர் திருமலை நன்றி கூறினார்.

Vadalur CC-Young Rovers trophy.-Dinamalar 19 04 11

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் பாலிடெக்னிக்கில் 7 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடந்தது. பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு பண்ருட்டி யங்ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்தது. இதில் 7 அணிகள் பங்கேற்றதில் வடலூர் வள்ளலார் கிரிக்கெட் கிளப் முதலாம் இடமும், அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி 2ம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கிளப் தலைவர் கலைரஞ்சன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்., அதிகாரி வளையாபதி முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ரெஜினால், கல்லூரி முதல்வர் சவரிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர். கிளப் செயலாளர் முகமதுரஸா நன்றி கூறினார்.

Wednesday, February 9, 2011

ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா போட்டி-Dinamalar


கடலூர் : ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய பைக்கா போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரர்கள் நேற்று கடலூரில் இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். கிராமப்புற இளைஞர்களிடம் உள்ள விளையாட்டு திறனை மேம்படுத்தும் பொருட்டு மத்திய அரசு கிராம, ஒன்றிய, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பைக்கா போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய பைக்கா போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் நாளை துவங்குகிறது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்கள் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி டேக்வாண்டோ, வாலிபால் மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் டேக்வாண்டோ வீரர்கள் 13 பேருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் வினாயகமூர்த்தி, இளம்பருதியும், வாலிபால் அணிக்கு தேர்வு பெற்ற 24 பேருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் ஆசிர்சாம், அகிலாவும், தடகள வீரர்கள் 34 பேருக்கு பயிற்சியாளர்கள் சங்கர் காத்தவராயன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி முடிந்து அனைவரும் தங்களது பயிற்சியாளர்களுடன் நேற்று மதியம் 2 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இருந்து சிறப்பு பஸ் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து இன்று ஆந்திரா செல்கின்றனர். கடலூரில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வழியனுப்பி வைத்தார்.

கடலூர் : குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் -dinamalar.

கடலூர் : குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டினார். கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பைக்கா போட்டி நடந்தது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ராஜேஷ், கார்த்திகேயன் மூன்றாமிடம் பிடித்தனர். குடியரசு தின குத்துச் சண்டை போட்டியில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் விக்னேஷ்வரன், பிராங்களின், செல்வமணி ஆகியோர் இரண்டாடமிடமும், ஜெயசீலன் நான்காவது இடமும் பிடித்தனர். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரதாப் மூன்றாமிடமும் பிடித்தார். பஞ்சாபில் நடந்த அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர் ஹரிபிரசாத், செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் மனோ பங்கேற்றனர். குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார். பயிற்சியாளர் சிவராஜ் உடனிருந்தார்.

Tuesday, February 8, 2011

: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி-Dinamalar

கோவை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை, கோவையில், பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், வரும் 19ம் தேதி துவங்குகிறது. கோப்பையை, பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில், இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது; இதில், கோவையும் ஒன்று. கோவை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ரிலையன்ஸ் சார்பில், கோவை ரெசிடென்சி ஓட்டலில், நேற்று நடந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தமிழ்நாடு, கேரள மாநில மையத்தின் தலைவர் ராகேஷ் சிங், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம், மரியாதை நிமித்தமாக வழங்கினர். சினிமா பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் இசையமைத்துப் பாடிய, போட்டிகளின் மைய நோக்கப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளுக்கு, திறந்த வாகனத்தில் உலகக்கோப்பை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ரிலையன்ஸ் நிர்வாகிகள், மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் லீக் -dinamalar

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் லீக் நான்காவது டிவிஷன் போட்டி முடிவுகள்:
ஸ்டன்னிங் ஸ்டிரைக்கர்ஸ் அணி பண்ணைக்காடு பண்ணை ராக்கர்ஸ் அணி யை வென்றது.அய்யலூர் கிளாசிக் அணி சீலப்பாடி பிரண்ட்ஸ் அணியை வென்றது. வசந்தாஸ் பசார் அணி சோனாமணி அணியை வென்றது. பாலு நினைவு அணி ஹார்ஸ் பவர் அணியை வென்றது. பழநி விவேகானந்தா அணியை திண்டுக்கல் சூப்பர்கிங்ஸ் அணி வென்றது. திண்டுக்கல் கே.எஸ்.ஆர்., அணி மெட்ரோ அணியை வென்றது.பெர்பெக்ட் அணி ஈகிள் அணியை வென்றது. நிலக்கோட்டை சியர் லயன்ஸ் அணி பிரண்ட்ஸ் அணியை வென்றது.பழநி எய்ம் ஸ்டார் அணி நிலக்கோட்டை ரியல் மிராக்கில்ஸ் அணியை வென்றது. கிளாசிக் அணி ஸ்டன்னிங் அணியை வென்றது. பாலு நினைவு அணி திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. காலிறுதி போட்டி: அய்யலூர் கிளாசிக் அணி வசந்தா பாய்ஸ் அணியை வென்றது. நிலக்கோட்டை சியர் லயன்ஸ் அணி பெர்பெக்ட் அணியை வென்றது.பழநி எய்ம் ஸ்டார் அணி நியூ டாமினேட்டர்ஸ் அணியை வென்றது. பாலு நினைவு அணி கே.எஸ். ஆர்., அணியை வென்றது. அரையிறுதி போட்டி: சியர் லயன்ஸ் அணியை கிளாசிக் அணியும்,பாலு நினைவு அணியை எய்ம்ஸ்டார் அணி வென்றது.


பட்டுக்கோட்டை அளவிலான ஆணழகன் போட்டி-Din amalar


பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அளவிலான ஆணழகன் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி ரோஷினி ஜிம்மில் நடந்தது. போட்டியில் ரோஷினி ஜிம் வீரர் மேசாக் மிஸ்டர் பெஞ்ச் 2011 மற்றும் மிஸ்டர் ரோஷினி கிளாஸிக் 2011 ஆகிய பட்டங்களை வென்றார். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளை பட்டுக்கோட்டை நகர போலீஸ் ஸ்டேஸன் எஸ்.ஐ., சுகுமாரன், வக்கீல் இளங்கோவன் மற்றும் ரோஷினி ஜிம் பயிற்சியாளரும் இந்திய இரும்பு மனிதன் பட்டம் வென்றவருமான சர்வதேச வலுதூக்கும் வீரர் நாடிமுத்து ஆகியோர் வழங்கினர். இந்த போட்டிக்கு நடுவராக சென்னையை சேர்ந்த இந்திய ஆணழகன் சங்க நடுவர் அமீர்பாஷா பணியாற்றினார். ஆணழகன் போட்டியில் 50 கிலோ எடைபிரிவில் பாலாஜி, மணிமாறன், 55 கிலோ எடை பிரிவில் மேசாக், பிரகாஷ், ரமேஷ், 60 கிலோ எடைப்பிரிவில் சதீஷ், பயாஸ் அஹமது, அக்பர் ஆகியோரும், 65 எடை பிரிவில் முகமது அலிஜின்னா, செபஸ்டின், பழனிச்சாமி ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.

பெஞ்ச் பிரஸ் போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் ஸ்ரீதரன், அப்துல் அஜிஸ், 60 கிலோ எடை பிரிவில் மேசாக், அப்துல் பூட்டோ, 67 கிலோ எடை பிரிவில் முருகானந்தம், சுகுனேஷ்வரன், ஏனாதி மதன்ஆகியோரும், 75 கிலோ எடை பிரிவில் செந்தில்குமார், முகமது அலிஜின்னா, சீனிவாசன் மற்றும் 75 கிலோவுக்கு கூடுதல் எடை பிரிவில் கவின்சான்ட்ரோன், மதியழகன், அரவிந்தன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

செஞ்சி சாணக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி

செஞ்சி : செஞ்சி சாணக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லட்சுமணதாஸ் வரவேற்றார். விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து டி.எஸ்.பி., விநாயகம் பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் பிரேமா, சரோஜா ஆகியோர் போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஹரிநாத் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சேத்துப்பட்டு பல்லவன் வங்கி கிளை மேலாளர் சிவசங்கர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Dinamalar sports page-cricket

Monday, February 7, 2011

கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் விளையாட்டுப் போட்டி-dinamalar

கடலூர் : கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜயோககுமார் வரவேற்றார். முதன்மை விருந்தினரான பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் அருளப்பன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். மாணவர்கள் சுதாகரன், பாலாஜி, மாணவிகள் சுவேத ஸ்ரீ, செல்ஷியா, ஸ்ரீநிதி ஆகியோருக்கு தனித்திறன் கோப்பைகள் வழங்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்ற சாஸ்தா அணிக்கு அணித்திறன் கோப்பையும், அதிக புள்ளி பெற்ற மாணவர் வித்யா சங்கருக்கு ஒட்டுமொத்த தனித்திறன் கோப்பையும் வழங்கப்பட்டது. துணை முதல்வர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டி


கடலூர் : கடலூரில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று கடலூரில் மராத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., தூரமும், 16 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 160 பேர் பங்கேற்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அண்ணா விளையாட்டரங்கில் துவங்கி கலெக்டர் அலுவலக சாலை, பாரதி சாலை, பீச் ரோடு வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைவரை சென்று, மீண்டும் பீச் ரோடு, ஜட்ஜ் பங்களா ரோடு வழியாக அண்ணா விளையாட்டரங்கை அடைந்தனர். போட்டியில் 16 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஸ்வநாதன், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் துரை, சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரசாந்த், மாணவிகள் பிரிவில் என்.எல்.சி., ஜவகர் பள்ளி மாணவி ஸ்ரீதேவி, கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சந்தியா, அம்சவள்ளி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

16 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் கடலூர் அடுத்த கோ.சத்திரம் மாயகிருஷ்ணன், விருத்தாசலம் விஜயமாநகரம் ராஜபாண்டியன், வெங்கடேசன், பெண்கள் பிரிவில் திட்டக்குடி வதிஷ்டபுரம் அன்புச் செல்வி, கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி ரேவதி, கடலூர் சொரக்கல்பட்டு பிரேமா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாயும், 2ம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 500 ரூபாய் மற்றும் சான்றிதழை கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பாண்டியன் வழங்கினர்.

Sachin -Dinamalar.

புதுடில்லி: ""நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. சர்ச்சைக்குரிய போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், எனது நேர்மை மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை, இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது,'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடந்தது. இப்போட்டியின் போது இந்திய வீரர் சச்சின், பந்தில் இருந்த புற்களை சுத்தம் செய்தார். ஆனால், இவர் பந்தை சேதப்படுத்தியதாக அநியாயமாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை <உறுதி செய்த "மேட்ச் ரெப்ரி' மைக் டென்னஸ், சச்சினுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதித்தார். இதையடுத்து இந்திய ரசிகர்கள் கொதிப்படைந்தனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இச்சம்பவம் உட்பட தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, பத்திரிகையாளர் கவுதம் பட்டாச்சார்யா எழுதியுள்ள "சச்' என்ற புத்தகத்தில் சச்சின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளதாவது:
போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் போது பந்தில் ஒட்டியிருந்த புற்களை தான் அகற்றினேன். ஒருபோதும் பந்தின் தையலை பிரிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. இது பற்றிய உண்மையை மைக் டென்னசிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், எதையும் கேட்க அவர் தயாராக இல்லை. இறுதியில் என் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய போது அதிர்ந்து போனேன்.
மக்கள் ஆதரவு:
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எனது நேர்மை மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கு முழு ஆதரவு அளித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நான் "பேட்' செய்ய களமிறங்கும் போதெல்லாம், இந்திய தேசமே என்னோடு சேர்ந்து வருவதாக வர்ணிப்பதுண்டு. போர்ட் எலிசபெத் போட்டியின் போது எனது கையில் "பேட்' இல்லை. ஆனாலும், ரசிகர்கள் முழு ஆதரவு அளித்தனர். அதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். இதனை இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. இந்த சம்பவத்துக்கு பின் பந்தை சுத்தம் செய்யும் போது, அம்பயர் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
சூதாட்ட சர்ச்சை:
கடந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டை சூதாட்ட சர்ச்சை உலுக்கிய போது, நான் கலங்கவில்லை. எனது கடமையில் மட்டும் கண்ணும்கருத்துமாக இருந்தேன். அந்த நேரத்தில் வருமான வரியை நேர்மையாக செலுத்தியதற்காக எனக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அது மிகுந்த நிம்மதியை தந்தது. இதனை பார்க்க எனது தந்தை இல்லையே என்ற ஏக்கம் மட்டும் மனதில் இருந்தது.
மும்பை தாக்குதல்:
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், மிகுந்த மனவேதனை அளித்தது. அப்போது கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். இரவில் தான் தாக்குதல் பற்றி தெரிய வந்தது. வீட்டில் உள்ளவர்களும் நெருக்கமானவர்களும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை போன் மூலம் தெரிந்து கொண்டோம். அந்த பயங்கரத்தை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட காலம் தேவைப்பட்டது.
இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/