கடலூர் : குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாராட்டினார். கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் பைக்கா போட்டி நடந்தது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ராஜேஷ், கார்த்திகேயன் மூன்றாமிடம் பிடித்தனர். குடியரசு தின குத்துச் சண்டை போட்டியில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் விக்னேஷ்வரன், பிராங்களின், செல்வமணி ஆகியோர் இரண்டாடமிடமும், ஜெயசீலன் நான்காவது இடமும் பிடித்தனர். வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரதாப் மூன்றாமிடமும் பிடித்தார். பஞ்சாபில் நடந்த அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவர் ஹரிபிரசாத், செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் மனோ பங்கேற்றனர். குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார். பயிற்சியாளர் சிவராஜ் உடனிருந்தார்.
No comments:
Post a Comment