Monday, February 7, 2011

கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் விளையாட்டுப் போட்டி-dinamalar

கடலூர் : கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் ராஜயோககுமார் வரவேற்றார். முதன்மை விருந்தினரான பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் அருளப்பன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். மாணவர்கள் சுதாகரன், பாலாஜி, மாணவிகள் சுவேத ஸ்ரீ, செல்ஷியா, ஸ்ரீநிதி ஆகியோருக்கு தனித்திறன் கோப்பைகள் வழங்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்ற சாஸ்தா அணிக்கு அணித்திறன் கோப்பையும், அதிக புள்ளி பெற்ற மாணவர் வித்யா சங்கருக்கு ஒட்டுமொத்த தனித்திறன் கோப்பையும் வழங்கப்பட்டது. துணை முதல்வர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/