Tuesday, February 8, 2011

செஞ்சி சாணக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி

செஞ்சி : செஞ்சி சாணக்யா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் லட்சுமணதாஸ் வரவேற்றார். விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து டி.எஸ்.பி., விநாயகம் பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் பிரேமா, சரோஜா ஆகியோர் போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஹரிநாத் பரிசுகள் வழங்கினார். முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சேத்துப்பட்டு பல்லவன் வங்கி கிளை மேலாளர் சிவசங்கர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/