Friday, May 6, 2011

ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள்-Dina malar 06 05 11


கிள்ளை : சிதம்பரம் ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் பிச்சாவரம் வரை தொடர் ஓட்டம் நடத்தினர். சிதம்பரம் ஷிட்டோ - ரியோ இந்தியன் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்கள் அவ்வப்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தில் துவங்கிய நடை பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஓட்டச் சுடரை எழுத்தாளர் பாலசுப்ரமணியன் ஏற்றினார். அணி வணிகர் பழனி துவக்கி வைத்தார். கராத்தே நிபுணர் சென்னை ரென்ஷி குமார், சென்சாய்கள் இளங்கோவன், விஸ்வநாதன், பாஸ்கர், சினிமா நடிகர் கராத்தே ராஜன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி, முன்னாள் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தொடர் ஓட்ட ஜோதி ஏந்தி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காராத்தே பயிற்சி மாணவர்கள் சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் வரை வரை 15 கி.மீ., தொடர் ஓட்டமாக சென்றனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/