Thursday, November 25, 2010
Wednesday, November 24, 2010
Tuesday, November 23, 2010
Sunday, November 21, 2010
Saturday, November 20, 2010
KSCA-elections-Mallya-throws-weight-behind-Kumble/
Dr Vijay Mallya, who backed Srikantadatta Narasimharaja Wadiyar last year, has decided to switch sides and support Anil Kumble and Javagal Srinath in the Karnataka State Cricket Association (KSCA) elections, which will be held on November 21.
Kumble is challenging Wadiyar for the post of KSCA president, while Srinath is contesting for the secretary's position.
Mallya said he has known Wadiyar for 25 years and had great expectations from his leadership, but events over the last three years have left him frustrated. "I had great hopes in his (Wadiyar's) leadership but what I saw in the KSCA in the last three years can best be described as frustrating and has disillusioned me," Bangalore Mirror quoted Mallya as saying.
Though Mallya alleged Wadiyar's team sole agenda was to destroy KSCA secretary Brijesh Patel, he absolved the KSCA president of any wrongdoing. Interestingly, Patel has decided against contesting the elections and will be supporting the Kumble-led team.
http://www.cricbuzz.com/cricket-news/32643/KSCA-elections-Mallya-throws-weight-behind-Kumble/
Kumble is challenging Wadiyar for the post of KSCA president, while Srinath is contesting for the secretary's position.
Mallya said he has known Wadiyar for 25 years and had great expectations from his leadership, but events over the last three years have left him frustrated. "I had great hopes in his (Wadiyar's) leadership but what I saw in the KSCA in the last three years can best be described as frustrating and has disillusioned me," Bangalore Mirror quoted Mallya as saying.
Though Mallya alleged Wadiyar's team sole agenda was to destroy KSCA secretary Brijesh Patel, he absolved the KSCA president of any wrongdoing. Interestingly, Patel has decided against contesting the elections and will be supporting the Kumble-led team.
http://www.cricbuzz.com/cricket-news/32643/KSCA-elections-Mallya-throws-weight-behind-Kumble/
மாநில அளவிலான கால்பந்து போட்டி-Dina malar.
திருச்சி: திருச்சியில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்ல விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் இரண்டு நாட்களாக நடந்தது. சூப்பர் சீனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் சென்னை விளையாட்டுப் பள்ளி, திருச்சி விளையாட்டு விடுதி, நெய்வேலி விளையாட்டுப் பள்ளி, மதுரை விளையாட்டு விடுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அணிகள் பங்கேற்றன.
போட்டிகளின் இறுதி போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், சூப்பர் சீனியர் பிரிவில் திருச்சி விளையாட்டு விடுதி அணியும், நெய்வேலி விளையாட்டு பள்ளி அணியும் மோதின. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. மற்றொரு பிரிவான சீனியர் பிரிவில் மதுரை விளையாட்டு விடுதி அணியும், திருச்சி விளையாட்டு விடுதி அணியும் மோதி ன. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் மதுரை விளையா ட்டு விடுதி அணி வெற்றிபெ ற்று முதல் பரிசினை பெற்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நியூ பிகின்செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ரதமணி வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு மண்டல முதுநிலை மேலாளர் நியூபிகின் செல்லப்பா பரிசு கோப்பை வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்ல விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் இரண்டு நாட்களாக நடந்தது. சூப்பர் சீனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் சென்னை விளையாட்டுப் பள்ளி, திருச்சி விளையாட்டு விடுதி, நெய்வேலி விளையாட்டுப் பள்ளி, மதுரை விளையாட்டு விடுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அணிகள் பங்கேற்றன.
போட்டிகளின் இறுதி போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், சூப்பர் சீனியர் பிரிவில் திருச்சி விளையாட்டு விடுதி அணியும், நெய்வேலி விளையாட்டு பள்ளி அணியும் மோதின. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. மற்றொரு பிரிவான சீனியர் பிரிவில் மதுரை விளையாட்டு விடுதி அணியும், திருச்சி விளையாட்டு விடுதி அணியும் மோதி ன. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் மதுரை விளையா ட்டு விடுதி அணி வெற்றிபெ ற்று முதல் பரிசினை பெற்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நியூ பிகின்செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ரதமணி வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு மண்டல முதுநிலை மேலாளர் நியூபிகின் செல்லப்பா பரிசு கோப்பை வழங்கினார்.
Friday, November 19, 2010
Thursday, November 18, 2010
மாநில அளவிலான கராத்தே போட்டி-Dinamalar 18 11 10
கடலூர் : மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் கடலூர் சி.கே.பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். சென்னை அசோக் நகரில் மாநில அளவிலான இஷின்ரியூ கராத்தே போட்டி நடந்தது. அதில் கடலூர் சி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்சாய் கிருஷ்ணன் தலைமையில் பங்கேற்றனர்.
அதில் குமுத்தே பிரிவில் ருத்ரராம் சங்கர் முதலிடத்திலும், திவ்யதர்ஷினி, ராஜராஜன் 2ம் இடத்திலும், கத்தா பிரிவில் பிரித்திவி, நிஷா, பிரிவின், அஜித், கி÷ஷார், முகமது மரைக்காயர் முதலிடத்திலும், கிருஷ்ணராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீதர் ரிஷிநாத் ஆகியோர் 2ம் இடத்தையும், பிரித்தி, இமான் வேல், ஹரிஹரன், பிரதாப், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பதக்கங்களை வென்றனர். மாநில கராத்தே போட் டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷியஸ் பாராட்டி, பரிசு வழங்கினர்.
அதில் குமுத்தே பிரிவில் ருத்ரராம் சங்கர் முதலிடத்திலும், திவ்யதர்ஷினி, ராஜராஜன் 2ம் இடத்திலும், கத்தா பிரிவில் பிரித்திவி, நிஷா, பிரிவின், அஜித், கி÷ஷார், முகமது மரைக்காயர் முதலிடத்திலும், கிருஷ்ணராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீதர் ரிஷிநாத் ஆகியோர் 2ம் இடத்தையும், பிரித்தி, இமான் வேல், ஹரிஹரன், பிரதாப், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பதக்கங்களை வென்றனர். மாநில கராத்தே போட் டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷியஸ் பாராட்டி, பரிசு வழங்கினர்.
Wednesday, November 17, 2010
கடின உழைப்பு தான் வெற்றிக்கான வழி-Dina malar
கடின உழைப்பு தான் வெற்றிக்கான வழி...! டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்: விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே, டேபிள் டென்னிஸ் பார்த்து வளர்ந்தவன் நான். அப்பா ஸ்ரீனிவாசராவும், சித்தப்பா முரளீதரராவும், டேபிள் டென்னிஸ், "கோச்சாக' இருந்தனர். அதனால், இயல்பாகவே எனக்கும் டேபிள் டென்னிஸ் மேல் ஆர்வம்.மற்றவர்கள் கிரிக்கெட் ஆடும் போது, நான் மட்டும் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். இதைப் பார்த்து அவர்கள், முறையாக எனக்கு டேபிள் டென்னிஸ் கற்றுக் கொடுத்தனர். 11வது வயதில், 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். அது, எனக்கு பெரிய திருப்புமுனை.அந்த வெற்றி, வெறியாக மாற, தினமும் 10 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். நிறைய தோல்விகளை சந்தித்தேன். ஆனால், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. காலேஜ் கலாட்டாக்கள், அம்மாவின் சமையல், மனைவியின் அன்பான நேரங்கள் என பலவற்றை இழந்துதான், இந்த உயரத்தை அடைய முடிந்தது.என்னை திணறடித்தது, இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகள். நாட்டின் நம்பர் ஒன் பிளேயர் என்பதால், என் மேல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். அதனாலேயே எனக்கு, பயமும், பதற்றமும் ஏற்பட்டது. விளையாடத் துவங்கும் முன், எதையும் யோசிக்காமல் போட்டிக்கு தயாரானேன். அமைதியான மனநிலையில் விளையாடியதால், ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வெல்ல முடிந்தது.இக்கட்டான பல நேரங்களில், எனக்கு நம்பிக்கை அளிப்பது அப்துல் கலாமின் சுயசரிதைதான். என் தலைசிறந்த ரோல் மாடல் அவர் தான்.எனக்கு 2004, 2008 ஒலிம்பிக் போட்டிகளில் தோல்வியே கிடைத்தது. அவை எனக்கு நல்ல பாடமாக, அனுபவமாக அமைந்தன. 2012ல், லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை, என் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக பார்க்கிறேன்.ஒலிம்பிக் தங்கம் தான், என் பல வருட கனவு. என் மனைவி, எனக்காக செய்த தியாகத்திற்காகவாவது இதை நான் அடைந் தே தீருவேன். ஏனென்றால், வெற்றிக்கு கடின உழைப்புதான் ஒரே நியாயமான வழி என்பதை உணர்ந்தவன் நான்.
Tuesday, November 16, 2010
Monday, November 15, 2010
Sunday, November 14, 2010
களக்காடு : மண்டல அளவிலான ஈட்டி எறிதல்
களக்காடு : மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வெற்றி பெற்றார். களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முத்துகுகன் தூத்துக்குடியில் நடந்த மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். இம்மாணவன் சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தலைமையாசிரியை சுசிலியா சுகந்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ்ராஜா, உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார் பாராட்டினர்.
Saturday, November 13, 2010
Friday, November 12, 2010
Thursday, November 11, 2010
Wednesday, November 10, 2010
அன்னூர் கூடைப்பந்து-Dinamalar.
அன்னூர்: அன்னூர் கூடைப்பந்து அணி மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது. "மே பிளவர்' கூடைப்பந்து கழகம் சார்பில் கோவை ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந் தது. அன்னூர் உள்பட 16 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ராஜலட்சுமி மில் "ஏ' அணி, அன்னூர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, ஒண்டி புதூர் கதிரி மில்ஸ் அணி, கோவை, சர்வஜன மேல்நிலைப்பள்ளி அணி ஆகியவை முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் இரண் டாம் இடம் வென்ற அன்னூர் அணியின் தலைவர் ஜீவானந்தம் மற்றும் வீரர்களுக்கு, அன்னூர் கூடைப்பந்து கழக செயலாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர், பெற் றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Tuesday, November 9, 2010
செஸ் விளையாட்டில் முத்திரை
புதுச்சேரி : கேந்திரிய வித்யாலயா மாணவி செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வருகிறார். புதுச்சேரி பல்கலைக்கழக கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 படிக்கும் மாணவி பிரியங்கா, தேசிய அளவிலான 19 வயதிற்குட்பட்ட சதுரங்க போட்டிகளில் பங்கேற்று பல பதங்கங்களை குவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் புனேவில், தேசிய அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடந்த சதுரங்கப் போட்டியில் சென்னை மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டில் மட்டுமின்றி படிப்பிலும் அசத்தும் இந்த சதுரங்க ராணி, சதுரங்கம் விளையாடப் போகும் முன் கணினியில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது தந்தை டாக்டர் கணேசன், இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மண்டல இயக்குனராக பணிபுரிகிறார். இவரது தாயார் உமாமகேஸ்வரி பி.இ., பட்டதாரி. எதிர் காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக @வண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரியங்கா கூறியதாவது: பல விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளேன். இருந்தாலும் சதுரங்கம் மீதுதான் எனக்கு அதிக விருப்பம். கோழிக்கோடு, மும்பை, டில்லி, போபால், கோவா ஆகிய நகரங்களில் நடந்த சதுரங்கப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளேன். சிறு வயதில் தாயாருடன் விளையாடியது எனக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது. படிப்பு, விளையாட்டு என இரண்டு குதிரையிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்பது எனது குறிக்கோள். எதிர் காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக @வண்டும் என்பது எனது லட்சியம். இவ்வாறு பிரியங்கா கூறினார்.
Monday, November 8, 2010
திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் பயிற்சி
திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்திலுள்ள, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் பயில்வோர், பயிலாதவர்கள் நீச்சல் கெற்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தகுதிவாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக் கொடுக்கும் வகையில் கடந்த இரண்டாம் தேதி பயிற்சி துவங்கியது. இப்பயிற்சி முகாம் நவம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது.
காலை 6.30 முதல் 7.30 மணி வரை மாணவர் மற்றும் ஆண்கள், 7.30 முதல் 8.30 மணிவரை மாணவி மற்றும் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் 500 ரூபாய். எட்டு வயதுக்கு மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் நீச்சல் குளத்தில் நேரில்வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உறுப்பினர் கட்டணம் செலுத்தி பயிற்சி செய்ய விரும்புவோர், ஆண்டுக்கு 3,000 ரூபாய், அரையாண்டுக்கு 1,750 ரூபாய், காலாண்டுக்கு 1,250 ரூபாய். மாதாந்திர கட்டணம் 500 ரூபாய் செலுத்தணும். விபரங்களுக்கு, அண்ணா விளையாட்டரங்க, மண்டல முதுநிலை மேலாளரை அணுகலாம். 9940341477, 9894574492 என்ற மொபைல் எண், 0431- 2420685 என்ற ஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.
காலை 6.30 முதல் 7.30 மணி வரை மாணவர் மற்றும் ஆண்கள், 7.30 முதல் 8.30 மணிவரை மாணவி மற்றும் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் 500 ரூபாய். எட்டு வயதுக்கு மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் நீச்சல் குளத்தில் நேரில்வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உறுப்பினர் கட்டணம் செலுத்தி பயிற்சி செய்ய விரும்புவோர், ஆண்டுக்கு 3,000 ரூபாய், அரையாண்டுக்கு 1,750 ரூபாய், காலாண்டுக்கு 1,250 ரூபாய். மாதாந்திர கட்டணம் 500 ரூபாய் செலுத்தணும். விபரங்களுக்கு, அண்ணா விளையாட்டரங்க, மண்டல முதுநிலை மேலாளரை அணுகலாம். 9940341477, 9894574492 என்ற மொபைல் எண், 0431- 2420685 என்ற ஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.
Friday, November 5, 2010
நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய்
கோவை: நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை கலெக்டர் உமாநாத் அறிக்கை: விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்ற நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை, 1,000 ரூபாய் வீதம் மாதந்தோறும் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் வாழும் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாத வருமானம் 2,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கடந்த ஏப்.1ல் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்ச விளையாட்டுத் தகுதிகளாக, தேசிய விளையாட்டுக்கழகங்கள் நடத்திய தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றிருக்க வேண்டும். மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை, கோவை நேரு விளையாட்டரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் டிச.31ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அகில இந்திய கபடி போட்டி-Dinamalar 04 11 10
கடலூர்:அகில இந்திய கபடி போட்டிக்கு கடலூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய சிறுவர், சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக சிறுமியர் கபடி அணிக்கு கடலூர் ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தேன்மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை மாணவி தேன்மொழியிடம் தமிழ்நாடு மாநில கபடி கழகத் துணைத் தலைவர் வேலவன்வழங்கினார்.மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பூங்கொடி, பயிற்சியாளர்கள் நடராஜன், புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மாநில அளவிலான கராத்தே போட்டி
கடலூர் : மாநில அளவிலான கராத்தே போட்டியில் கடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாநில அளவிலான இஷின்ரியூ கராத்தே போட்டி சென்னையில் நடந்தது. கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அதில் பிளாக் பெல்ட் குமுத்தே பிரிவில் மாணவர்கள் பிரபஞ்ச வேதாந்தன் இரண்டாமிடமும், யாசர் அராபத் மூன்றாமிடமும் பெற்றனர். கலர் பெல்ட் பிரிவில் பாலசந்தர் முதலிடத்தையும், சரவணகுமார் இரண்டாமிடத்தையும், விக்னேஷ் மூன்றாமிடமும் பெற்றனர். கலர் பெல்ட் கத்தா பிரிவில் சிபி, பாலச்சந்தர் முதலிடத்தையும், ஜானகிராமன், விக்னேஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ் ணன் ஆகியோரை பள்ளியின் தாளாளர் மாவீர்மல் சோர்டியா, தலைமை ஆசிரியர் சிவானந்தம் பாராட்டினர்.
மாநில அளவிலான கோ கோ போட்டி
கடலூர் : சென்னையில் நடந்த மாநில அளவிலான கோ கோ போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணி வெற்றி பெற்றது.சென்னை குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அள விலான கோ கோ போட்டி நடந்தது. மாநிலத்தின் பல் வேறு பள்ளிகளைச் சேர்ந்த 20 அணிகள் பங் கேற்றன. கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சுழற் கோப்பையை வென்றனர்.அதேப்போன்று வேலூர் கிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர்கள் தேவகுமார், செல்வராஜ் ஆகியோரை பாராட்டி பள்ளியின் முதல்வர் ஆக்னல் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், கிளமென்ட், சின்னப்பராஜ், புஷ்பராஜ் உடனிருந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர்கள் தேவகுமார், செல்வராஜ் ஆகியோரை பாராட்டி பள்ளியின் முதல்வர் ஆக்னல் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், கிளமென்ட், சின்னப்பராஜ், புஷ்பராஜ் உடனிருந்தனர்.
Thursday, November 4, 2010
Wednesday, November 3, 2010
சிவகாசி : செஸ் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே சிவகாசி
சிவகாசி : செஸ் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே சிவகாசி பழக்கடை வியாபாரி பால்சாமியின் மகன் மகேஸ்வரன்(23)னின் நீண்ட நாள் ஆசை. இவர் 6ம் வகுப்பு படித்தபோது செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்க போய், பின்னர் அதுவே ஆசையாகி விட, காய்களை நகர்த்த கற்றுக் கொண்டார்.
எதிராளியின் ராணியையும், ராஜாவையும் வெட்டுவதில் கை தேர்ந்தார். 1996ல் மாவட்டஅளவிலான 14 வயதினருக்கான போட்டியில் முதலிடம் பெற்றார். கரூரில் 15 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் நான்காமிடம், மும்பையில் நடந்த தேசிய போட்டியில் 21வது இடம் பெற்றார். சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் 1999ல் நடத்திய ரேட்டிங் போட்டியில் 19 வயது பிரிவில், அப்போதைய உலக சாம்பியன் பூபேஸ் ஆனந்த் உடன் விளையாடி வென்றார்.
சென்னையை சேர்ந்த உலக சாம்பியன் ஆர்த்தி ராமசாமியை கடைசி சுற்றில் சமன் செய்தார். இவர் ஏழாம் வகுப்பு படிப்பதற்குள்ளே உலக சாம்பியன்களுடன் விளையாடிய சாதனை அனைவரையும் வியக்க வைத்தது. ஒரே விளையாட்டில் ஒன்பது வீரர்களை சந்தித்து மூன்று புள்ளிகள் பெற்றால் ரேங்கிங் கிடைக்கும். இவர் ரேங்கிங் பெற எட்டு பேருடன் விளையாடினார். ஒருவருடன் விளையாட வாய்ப்பு இல்லை. பின் கேரளாவில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் ஒருவரை வென்று உலக தரவரிசையில் எட்டாமிடம் பெற்றார்.
இவரின் விளையாட்டு திறனை பாராட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்விக்கான செலவுகளை ஏற்றது. பி.எஸ்சி., (ஐ.டி.) படித்தார். 2004- 2007 வரை மதுரை காமராஜ் பல்கலை செஸ் சாம்பியனாக வலம் வந்தார். "ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் வேலூர் வி.ஐ.டி., கல்லூரியில் எம்.சி.ஏ., படித்தார். அங்கிருந்து அகில இந்திய பல்கலைகளுக்கு இடையே கான்பூர், பீகாரில் நடந்த போட்டிகளில், சென்னை பல்கலை அணியில் விளையாடி முதலிடம் பெற்றார். படிக்கும் போதே தெற்கு ரயில்வேயில் வேலை தேடி வந்தது. படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் வேலையில் சேரவில்லை. மும்பையில் நடந்த நேஷனல் "ஏ' லெவல் போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரவீன் திபேயை சமன் செய்தார். பின்னர் "பிடே' (பெடரேசன் இன்டர்நேஷனல் டிச்சஸ்) அமைப்பின் தரம் பெற்றார்.
ஐந்து முறை அகில இந்திய போட்டியில் பங்கேற்று இரு முறை முதலிடமும், ஒருமுறை இரண்டாமிடமும் பெற்றார். 2009ல் இலங்கையில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் உலக அளவில் 15வது இடம் பெற்றார். தமிழக அளவில் ஓபன் செஸ் போட்டியில் மூன்றாவது இடத்திலும், அகில இந்திய போட்டியில் விளையாடி 24வது இடத்திலும் உள்ளார். இந்தாண்டு, டில்லி குர்கானில் நடந்த அகில இந்திய போட்டியில் தமிழக செஸ் அணி கேப்டனாக சென்று 11வது இடத்தை பெற்றார்.
இவர் கூறியதாவது: செஸ் விளையாடும் மாணவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாக இருப்பர். கணிதத்தை எளிதாக செய்வர். தினமும் பயிற்சி செய்கிறேன். ஆன் லைனில் இதற்கு பலரின் சாதனை அறிந்து கம்ப்யூட்ட ரில் விளையாடி பயிற்சி பெறுகிறேன். என் வளர்ச்சிக்கு ராஜன், சென்னை ஹரிஹரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் போல கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம், என்றார்.
எதிராளியின் ராணியையும், ராஜாவையும் வெட்டுவதில் கை தேர்ந்தார். 1996ல் மாவட்டஅளவிலான 14 வயதினருக்கான போட்டியில் முதலிடம் பெற்றார். கரூரில் 15 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் நான்காமிடம், மும்பையில் நடந்த தேசிய போட்டியில் 21வது இடம் பெற்றார். சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் 1999ல் நடத்திய ரேட்டிங் போட்டியில் 19 வயது பிரிவில், அப்போதைய உலக சாம்பியன் பூபேஸ் ஆனந்த் உடன் விளையாடி வென்றார்.
சென்னையை சேர்ந்த உலக சாம்பியன் ஆர்த்தி ராமசாமியை கடைசி சுற்றில் சமன் செய்தார். இவர் ஏழாம் வகுப்பு படிப்பதற்குள்ளே உலக சாம்பியன்களுடன் விளையாடிய சாதனை அனைவரையும் வியக்க வைத்தது. ஒரே விளையாட்டில் ஒன்பது வீரர்களை சந்தித்து மூன்று புள்ளிகள் பெற்றால் ரேங்கிங் கிடைக்கும். இவர் ரேங்கிங் பெற எட்டு பேருடன் விளையாடினார். ஒருவருடன் விளையாட வாய்ப்பு இல்லை. பின் கேரளாவில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் ஒருவரை வென்று உலக தரவரிசையில் எட்டாமிடம் பெற்றார்.
இவரின் விளையாட்டு திறனை பாராட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்விக்கான செலவுகளை ஏற்றது. பி.எஸ்சி., (ஐ.டி.) படித்தார். 2004- 2007 வரை மதுரை காமராஜ் பல்கலை செஸ் சாம்பியனாக வலம் வந்தார். "ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் வேலூர் வி.ஐ.டி., கல்லூரியில் எம்.சி.ஏ., படித்தார். அங்கிருந்து அகில இந்திய பல்கலைகளுக்கு இடையே கான்பூர், பீகாரில் நடந்த போட்டிகளில், சென்னை பல்கலை அணியில் விளையாடி முதலிடம் பெற்றார். படிக்கும் போதே தெற்கு ரயில்வேயில் வேலை தேடி வந்தது. படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் வேலையில் சேரவில்லை. மும்பையில் நடந்த நேஷனல் "ஏ' லெவல் போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரவீன் திபேயை சமன் செய்தார். பின்னர் "பிடே' (பெடரேசன் இன்டர்நேஷனல் டிச்சஸ்) அமைப்பின் தரம் பெற்றார்.
ஐந்து முறை அகில இந்திய போட்டியில் பங்கேற்று இரு முறை முதலிடமும், ஒருமுறை இரண்டாமிடமும் பெற்றார். 2009ல் இலங்கையில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் உலக அளவில் 15வது இடம் பெற்றார். தமிழக அளவில் ஓபன் செஸ் போட்டியில் மூன்றாவது இடத்திலும், அகில இந்திய போட்டியில் விளையாடி 24வது இடத்திலும் உள்ளார். இந்தாண்டு, டில்லி குர்கானில் நடந்த அகில இந்திய போட்டியில் தமிழக செஸ் அணி கேப்டனாக சென்று 11வது இடத்தை பெற்றார்.
இவர் கூறியதாவது: செஸ் விளையாடும் மாணவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாக இருப்பர். கணிதத்தை எளிதாக செய்வர். தினமும் பயிற்சி செய்கிறேன். ஆன் லைனில் இதற்கு பலரின் சாதனை அறிந்து கம்ப்யூட்ட ரில் விளையாடி பயிற்சி பெறுகிறேன். என் வளர்ச்சிக்கு ராஜன், சென்னை ஹரிஹரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் போல கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம், என்றார்.
Tuesday, November 2, 2010
சேலம் செயின்ட்ஸ் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மென்பந்து போட்டி
சேலம்: சேலம் செயின்ட்ஸ் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மென்பந்து போட்டி நடந்தது. அதில் சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் திருச்சி அணி முதல் இடத்தையும், சேலம் அணி இரண்டாவது இடத்தையும், நாமக்கல் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. மாணவிகள் பிரிவில் சேலம் முதல் இடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும், சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்ற திருச்சியை சேர்ந்த சிவபாலன், மனுகுலதீபன், சேலத்தை சேர்ந்த விஜய் கிருஷ்ணன், விகாஸ், மோனீஸ் ஹர்சன், நாமக்கல்லை சேர்ந்த மகாதேவராஜன், சித்தேஸ்வரன், மாணவிகள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ஷீபா, அனிஷா, வைஷ்ணவி, திருச்சியை சேர்ந்த மாளவிகா, பிரியங்கா, சென்னையை சேர்ந்த கார்த்திகா, அபிமித்ரா ஆகியோசர் சீனியர் மென்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு செயின்ட்ஜான்ஸ் பள்ளி முதல்வர் ஜான்ஜோசப், மென்பந்து சங்க தலைவர் ஜெயின், டைமன்ட்ரேஸ் பள்ளி முதல்வர் சுரேஷ்பாபு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
இவர்கள் அனைவரும் டிசம்பர் 25 முதல் 29 ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்ற திருச்சியை சேர்ந்த சிவபாலன், மனுகுலதீபன், சேலத்தை சேர்ந்த விஜய் கிருஷ்ணன், விகாஸ், மோனீஸ் ஹர்சன், நாமக்கல்லை சேர்ந்த மகாதேவராஜன், சித்தேஸ்வரன், மாணவிகள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ஷீபா, அனிஷா, வைஷ்ணவி, திருச்சியை சேர்ந்த மாளவிகா, பிரியங்கா, சென்னையை சேர்ந்த கார்த்திகா, அபிமித்ரா ஆகியோசர் சீனியர் மென்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு செயின்ட்ஜான்ஸ் பள்ளி முதல்வர் ஜான்ஜோசப், மென்பந்து சங்க தலைவர் ஜெயின், டைமன்ட்ரேஸ் பள்ளி முதல்வர் சுரேஷ்பாபு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
இவர்கள் அனைவரும் டிசம்பர் 25 முதல் 29 ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
கடலூர் : கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கடலூர் அயன்மேன் ஹைடெக் ஜிம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி டவுன் ஹாலில் நடந்தது. 55 கிலோ 65, 70, 75, 75 பிளஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். போஸ், சீனுவாசராகவன், அமீர்பாஷா, சுகுமார் நடுவர்களாக இருந்தனர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாநில கபடி சங்கத் தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கராத்தே ஆறுமுகம் வரவேற்றார். புதுச்சேரி மாநில சபாநாயகர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கணேஷ் சாம் பின் பட்டமும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முத் துக்குமரன் முதலிடமும் பெற்றனர். மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் பாபு, யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Monday, November 1, 2010
மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இடையிலான செஸ் போட்டி
மதுரை:டால்பின் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் ராஜிவ்காந்தி, அபினேஷ் பிரசன்னாஜீ, கோபிகிருஷ்ணன், அருண்பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர். முதலிடம் பெற்று, "அறிவானந்த பாண்டியன்' சுழற்கோப்பையை வென்றனர். மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் 14 வயது பிரிவில் அரவிந்த் சிதம்பரம், மீனுப்ரியா முதலிடம், ஹேமப்ரியா, அகில் 2ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் சுப்ரமணியன் 2ம் இடம், சீத்தாலட்சுமி 3ம் இடம், 19 வயது பிரிவில் மணிகண்டன், கார்த்தியாயினி முதலிடம், உமாமகேஸ்வரன் 2ம் இடம் பெற்றனர். மாணவர்கள் கார்த்தியாயினி, மணிகண்டன், காஷ்மீரில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பள்ளித் தாளாளர் ராமனாதன், முதல்வர் பத்மா, பயிற்சியாளர் ரமணன், மாணவர்களை பாராட்டினர்.
மாநில போட்டிக்குவிண்ணப்பம்நடப்பு கல்வியாண்டில், மண்டல பள்ளிகளுக்கான புதிய விளையாட்டுகள், தடகளம் மற்றும் குழுவிளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள், அணிகள் மாநிலப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற போட்டிகள் அனைத்திற்கும் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர் பெயர், வயது, பிறந்ததேதியுடன் பள்ளித் தலைமையாசிரியர், அணி மேலாளர் கையெழுத்துடன் அனுப்ப வேண்டும். மாநில குழு விளையாட்டுப் போட்டிகளில் 17 வயது பிரிவுக்கு ராமநாதபுரத்திலும், 19 வயது பிரிவுக்கு வேலூரிலும் போட்டிகள் நடக்கின்றன. கூடுதல் தகவல்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரியை 94880 11756ல் தொடர்பு கொள்ளலாம்.தடகளம்மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான மண்டல தடகளப் போட்டிகள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நவ., 22ல் நடக்கிறது. 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், தடைஓட்டம், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், 400, 1600 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகள் 14, 17, 19 வயதுப் பிரிவுகளின் கீழ் நடக்க உள்ளது. இத்தகவலை, மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/
-
Veda Dharma Sastra Paripalana December 18 at 2:26am · KALPAKKAM "VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Pari...
-
Shri Yagnarama bagavatar and cuddalore shri muralidhara sharama [dhivyanam at tiruvisalur- 37 mts. http://youtu.be/BI1M75gWVF4