வேலூர்: வேலூரில் மாநில சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
வேல் இன்டர் நேஷனல் செஸ் அகடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில சதுரங்கப் போட்டிகள் வேலூரில் நேற்று நடந்தது. இதில் 12 வயது பிரிவில் வேலூர் சன் பீம் பள்ளி மாணவன் பாலபாரதி அர்ஜூன் முதல் பரிசு பெற்றார். இவருக்கு ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை உதவி பொது மேலாளர் ரவி பாபு கோப்பை யை பரிசாக வழங்கினார். பள்ளி தாளாளர் மாதவன், பாரதி செஸ் அகடமி தலைவர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment