Tuesday, November 2, 2010

சேலம் செயின்ட்ஸ் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மென்பந்து போட்டி

சேலம்: சேலம் செயின்ட்ஸ் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மென்பந்து போட்டி நடந்தது. அதில் சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் திருச்சி அணி முதல் இடத்தையும், சேலம் அணி இரண்டாவது இடத்தையும், நாமக்கல் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. மாணவிகள் பிரிவில் சேலம் முதல் இடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும், சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்ற திருச்சியை சேர்ந்த சிவபாலன், மனுகுலதீபன், சேலத்தை சேர்ந்த விஜய் கிருஷ்ணன், விகாஸ், மோனீஸ் ஹர்சன், நாமக்கல்லை சேர்ந்த மகாதேவராஜன், சித்தேஸ்வரன், மாணவிகள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ஷீபா, அனிஷா, வைஷ்ணவி, திருச்சியை சேர்ந்த மாளவிகா, பிரியங்கா, சென்னையை சேர்ந்த கார்த்திகா, அபிமித்ரா ஆகியோசர் சீனியர் மென்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு செயின்ட்ஜான்ஸ் பள்ளி முதல்வர் ஜான்ஜோசப், மென்பந்து சங்க தலைவர் ஜெயின், டைமன்ட்ரேஸ் பள்ளி முதல்வர் சுரேஷ்பாபு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
இவர்கள் அனைவரும் டிசம்பர் 25 முதல் 29 ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/